Tuesday 6 December 2011

தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா 


முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ 


சோழன்,1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன்,உலகின் 


முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் 


இவருடைய புகழை ,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக 


அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ? 


ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் 


மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்!!!!!







Monday 21 November 2011

உணவு முறையில் தமிழ்க் கலாச்சாரம்











தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..
நன்றி - தமிழ்க்குடில்
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் . 
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்

Saturday 10 September 2011

ஞாபகமறதி என்பது வரமா? சாபமா?

ஞாபகமறதியை அன்றாடம் சந்திக்காத நபர் இருக்கமுடியாது, இதற்கு மூலகாரணம் அறிய கடமைப்பட்டு இருக்கிறேன். பெரும்பாலும் அறிவியல்ரீதியாக பல  காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அது தவிர மனரீதியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. நான் இங்கே மனரீதியாக உள்ள காரணிகளை பற்றி என் கருத்தை எடுத்து   வைக்கிறேன்

முதல் முக்கிய காரணம்: பதற்றம், பெரும்பாலும் இந்த  சூழலில் மறதி மிக அதிகமாக இருக்கும். காரணம், மனம் தெளிவாக சிந்திக்கும் திறனற்று இருக்கும்.

இரண்டாவது: பிடிக்காத விஷயம் செய்தல், பெரும்பாலும் இந்த  சூழலில் மறதி பொதுவாக இருக்கும். காரணம், முழு  ஈடுபாடின்மை .

மூன்றாவது: மறதியை பெரிது படுத்தாமல் இருத்தல், மறதி இருப்பது    அறிந்தும் அதற்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பது. காரணம் அடைந்ததை விட இழந்ததை பற்றி அறியாமல் இருத்தல்.

நான்காவது: மறதிக்கு தீர்வு காண நினைத்து குறிப்பாக என்ன செய்வது என்று தெரியாமல் இருத்தல், காரணம் முயற்சி உண்டு தேர்ச்சி இல்லை.


இதற்கு மேலும் சில காரணிகள் இருக்கலாம்........... மறதியை கட்டுபடுத்த முதல் தேவை, நம்பிக்கை வேண்டும்-இது ஒரு தீர்க்க முடியாத நோய் இல்லை. மனித மூளையை பயன்படுத்தாத நிலை.

இதற்கு ஒரு உதாரணம்- யாரேனும் எனக்கு ஞாபகமறதி உண்டு என்று கூறினால், அது ஒரு தற்காப்பு முயற்சியே, அவர்கள் வேறு சில வேலைகளை செய்யும் போது அதை உணர முடியாது. காரணம் ஈடுபாடே.


சில சமயங்களில் ஞாபகமறதியும் நன்மையே!!!!!!!!

நன்றும் தீதும் கலந்ததே உலகம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு நடந்த நன்மையை விட நடந்த தீமையே நம் மனதில் மேலோங்கிநிற்கும், அது நம் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையல்லவா? இங்கே மறதி நமக்கு நன்மையே!

இறுதியாக, மறதியை ஒரு கத்தி போல பழங்கள் நறுக்கவும் பயன்படுத்தலாம், கையை நறுக்கவும் பயன்படுத்தலாம். முடிவு அவரவர் கையிலே!!!!!!!!!!!!!!!!






Thursday 8 September 2011

சுய விமர்சனம்

என் பள்ளி கல்லூரி நாட்களில் நான் பேசுவதை மிகவும் விரும்பினேன், அதில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். பிறரை பற்றி நினைத்து பார்த்ததில்லை. நாள்ளிடைவில் அது என் தனி திறமையாக உரு பெற்றது. என் மகிழ்ச்சி, என் இன்பம் அது ஒரு உலகம். காலபோக்கில் நான் என் வாழ்கையில் பிறரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதில் பலனும் பெறேன்,ஒரு சிலரை இழக்கவும் நேரிட்டது. நான் வருந்தவில்லை!

                                     அனால் இன்றோ நான் என் கடந்த பாதையை நினைத்து பார்த்தால் பல சமயம் சிந்தனையற்று பேசி இருக்கிறேன். நான் மிக இயல்பாக பேசியவை பல சமயங்களில்  மிக சரியாக தவறாக பொருள் கொண்டோர் பலர்- தெளிவாக பேசவில்லை என்று வருந்துகிறேன்!!!!! 

என்னை நன்கு புரிதோரை தவிர்த்து புதியோரிடம்  பரிமாற்றத்தை குறைத்து கொண்டேன். சிந்திக்க துவகியதால் எனவோ என் பேச்சு குறைந்து கொண்டே போகிறது.
சமீபமாக என் நண்பனிடம் உரையாடும் போது என் நண்பன் கூறிய ஒன்று,எங்கள் உரையாடலில் நான் குறைவாக பேசி, கவனம் மேல் ஓங்கி இருந்ததாக கூறினான்.

இது ஒரு புதிய கருத்து. எனக்கு இது புதிதாக தோன்றுகிறது ! பிடித்தும் இருக்கிறது .
இதை தொடர விரும்பிகிறேன்!!!!!!!!!!