Thursday 8 September 2011

சுய விமர்சனம்

என் பள்ளி கல்லூரி நாட்களில் நான் பேசுவதை மிகவும் விரும்பினேன், அதில் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். பிறரை பற்றி நினைத்து பார்த்ததில்லை. நாள்ளிடைவில் அது என் தனி திறமையாக உரு பெற்றது. என் மகிழ்ச்சி, என் இன்பம் அது ஒரு உலகம். காலபோக்கில் நான் என் வாழ்கையில் பிறரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதில் பலனும் பெறேன்,ஒரு சிலரை இழக்கவும் நேரிட்டது. நான் வருந்தவில்லை!

                                     அனால் இன்றோ நான் என் கடந்த பாதையை நினைத்து பார்த்தால் பல சமயம் சிந்தனையற்று பேசி இருக்கிறேன். நான் மிக இயல்பாக பேசியவை பல சமயங்களில்  மிக சரியாக தவறாக பொருள் கொண்டோர் பலர்- தெளிவாக பேசவில்லை என்று வருந்துகிறேன்!!!!! 

என்னை நன்கு புரிதோரை தவிர்த்து புதியோரிடம்  பரிமாற்றத்தை குறைத்து கொண்டேன். சிந்திக்க துவகியதால் எனவோ என் பேச்சு குறைந்து கொண்டே போகிறது.
சமீபமாக என் நண்பனிடம் உரையாடும் போது என் நண்பன் கூறிய ஒன்று,எங்கள் உரையாடலில் நான் குறைவாக பேசி, கவனம் மேல் ஓங்கி இருந்ததாக கூறினான்.

இது ஒரு புதிய கருத்து. எனக்கு இது புதிதாக தோன்றுகிறது ! பிடித்தும் இருக்கிறது .
இதை தொடர விரும்பிகிறேன்!!!!!!!!!!

1 comment:

  1. பகுதி / முழு நேரமாக பதிவுகள் எழுதி தர ஆட்கள் தேவை

    95 66 66 12 14
    95 66 66 12 15
    cpedenews@gmail.com

    ReplyDelete